தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை பூரணமாக குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார்