தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிச. 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை (டிச.23 – ஜன.1 வரை) 11 நாட்களுக்கு பதில் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.