சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.