தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண் கணக்கிடும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தற்போது உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.