சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி, அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியாத அரசு பொறுப்பேற்று எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதன் அடிப்படையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க-வினர் மீது திமுக எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் அதை நீதிமன்றத்தின் வாயிலாக முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயார். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் DMK-வில் முக்கால்வாசி பேர் மாட்டிக் கொள்வார்கள். அந்த பதட்டத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்” என தெரிவித்தார்.