வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்த நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அரசு கணக்குகளில் பணம் எடுத்தல் மற்றும் செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கி கிளைகள் மட்டும் செயல்பட உள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.