தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. திரைப்படத்தில் நான்கு வருடங்களுக்கு பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி காலை 9 மணிக்கு பின்னர் தான் திரையரங்குகளில் காட்சிகளை தொடங்க வேண்டும் என்றும் இரவு 1.30 மணிக்குள்ளாக காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.