தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மேரி என்ற மூதாட்டி சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ₹1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுததாகவும், உடனே அவருக்கு ஆறுதல் கூறி திமுக சார்பில் ₹2000 வழங்கியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.