பொதிகை விரைவு ரயிலில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற 30 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் மனைவி மோனிஷாவை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, விமானம் மூலம் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. பல அரசியல் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.