புதிய மாவட்டங்களை உருவாக்க விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.