சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து எம்.பி. பதவியை ராகுல் காந்திக்கு அளித்தது மக்களவை செயலகம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இந்நிலையில் இன்றே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 2 தினங்களில் வரவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.