அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி வழக்கின் தீர்ப்பு வரும் வரை விசாரணைக் கைதியாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டும்.