கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு கவுன்சிலர் கு.சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பேரணியில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவுன்சிலரை சோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.