காரைக்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில், காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் ஆனது. இதில், காரில் வந்தவர்கள் கைத் துப்பாக்கியை காண்பித்து தரையை நோக்கி சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.