செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, ஒரு மணி நேரம் கூடம் தாமதிக்காமல், உடனடியாக புழல் சிறைக்கு அமலாக்கத்துறை விரைந்துள்ளது. புழல் சிறையில் இருந்து வெளியேற்றி, தற்போதைக்கு கும்மிடிப்பூண்டி அல்லது சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.