கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருவரை பலி வாங்கியிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, காளசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்