உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறையினர் பிரயாக்ராஜ் அழைத்துச் சென்றனர். ஊடகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த இருவரும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.