4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முதல் வெற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், அவர் தான் அடுத்த முதல்வர் என கூறப்படுகிறது. இதனால், பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.