“மிக்ஜாம் புயல்” எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்துசேவை, உணவகங்கள் இயங்காது என தகவல் வெளியான நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை, உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும்; டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு 6 மணிக்கு மேல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.