தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கி உள்ளது. சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்று எடுத்துவரப்பட்ட 2.36 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.