மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் சங்கர் – மனோலியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் துன்புறுத்தியதாக எம்எல்ஏ சதா சிவம், மகன் சங்கர், மாமியார் பேபி மீது மனோலியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.