தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு 1,17,129போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 625 ரூபாயும், 91 முதல் 151 நாட்களுக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கு 85 ரூபாயும், 151 முதல் 200 நாட்களுக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கு 195 ரூபாயும் வழங்கப்படும். இதற்காக ரூ.7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.