2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அனைத்து துறைகளையும் சேர்ந்து அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி இன்று சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அதாவது இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்வதற்கு முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கைரேகை மூலம் பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.