தமிழ்நாடு அமைச்சராக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ள உதயநிதி தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சரான பிறகு முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கபடி மற்றும் சிலம்பம் போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும்சென்னையில் உலக கோப்பை கபடி போட்டிகள் நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறியுள்ளார்.