பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.