6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சென்னையை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது