பஸ் ஸ்டிரைக் மத்தியிலும், மதியம், இரவு ஷிஃப்டில் இருப்பவர்களையும், விடுப்பில் சென்றவர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்டிரைக் முதல் நாளான இன்று பலரும் ஓய்வு இல்லாமல், பணிக்கு வந்துள்ளதால், நாளை இதே நிலை நீடிக்க வாய்ப்பில்லை. இதனால், நாளை அதிகளவில் பேருந்துகள் ஓடாது; ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணி செய்தால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.