பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் பைரோஸ் அகமது உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இஸ்லாமியராக பிறந்து இருந்தாலும், முழுக்க முழுக்க இந்து ஆன்மீகத்தில் முழு ஞானம் பெற்றவர். சிதம்பரம் நடராஜர் குறித்தும், திருவாசகம் பற்றியும், வள்ளலார் தொடர்பாகவும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் சிறப்பானது ஆகும். அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.