கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காயத்ரி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளார். ஆனால், நீக்குவதற்கு முன் அவர் விலகல் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.