தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து விளக்கமளிக்க உள்ளார். மேலும், போகும்போது முக்கிய அமைச்சர்களின் பைல்களையும் எடுத்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.