இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு வசதியாக ‘உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தில் பாஸ்போர்ட் பெறுவதில் தாமதம், சிக்கல் உள்ளிட்ட குறைகளுக்கு பொதுமக்கள் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை முன் அனுமதி இன்றி நேரில் சென்று சந்தித்து, அவரிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.