மணிப்பூரில் குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சமூகத்தை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். லாங்கோல், நகாரியன் மலைப்பகுதியில் 2 நர்சிங் மாணவிகள், இம்பாலில் மே 4க்கு பின் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகொடுக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.