காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சோதனை அடிப்படையில் செந்தில் பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது