மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். ஒன்றரை மாதம் கழித்து இப்போதுதான் சிறைக்குள் சென்றிருக்கிறார்.