சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அசோக் சிகாமணி மருத்துவராக இருக்கிறார்.