பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கும் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.