ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.