நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெய்வேலியில் CRPF படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.