அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கானது ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.