தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர், டியூப் போன்றவற்றை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மாநகராட்சி முன்னெடுக்க உள்ளது. எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசினை தடுப்பதற்கு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது..