மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தேவைப்படுவதால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி தொடங்கி வரும் 12ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.