தஞ்சாவூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அதிமுக 30 வார்டு உறுப்பினர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் ஆப் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர் நெஞ்சில் கை வைத்து வெளியே போ என திமுக உறுப்பினர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் அமமுக உறுப்பினர்கள் முறையாக பேச அனுமதிக்கவில்லை எனவும் புகார் இணைந்துள்ளது. கீழவாசல் பாலம் முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.