வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் நிர்வாகிகள் கூட்டம் காலையில் நடைபெற்றது. அப்போது திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.