அனைத்து மாவட்டங்களில் புதிய நபர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.