ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய அக்கா சௌந்தர்யாவை பெரிய கொடிவேரிக்கு அழைத்து செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் ஆப்பக்கூடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேன் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சௌந்தர்யா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.