தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக ஒருமணி நேரம் வகுப்பு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.