நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.