தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.