குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் அதற்கு முந்தைய நாள் நடைபெற வேண்டிய குறைதீர் முகாம் நவம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு குறைதீர் முகாம் நடைபெறும் எனவும் இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.