செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையை கோரியிருக்கிறார் அந்த உறவினர்.